விருதுநகர்: சதுரகிரி மலை கோயிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனி மாத பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சதுரகிரி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர்.