சென்னை: தேவநேயப் பாவாணருக்கு தென்காசியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.