செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2 மணிநேரமாக செங்கல்பட்டில் ரயில்கள் இல்லாததால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர் தவித்து வருகின்றனர். தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களும் ஒருமணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.