பீகார் துணை சபாநாயகர் ராஜினாமா

பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த தலைவரான மஹேஸ்வர் ஹசாரி தனது துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இரண்டாவது முறை எம்எல்ஏவான ஹசாரி கல்யான்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2021ம் ஆண்டு மார்ச்சில் இருந்து துணை சபாநாயகர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் தலைவரான முதல்வர் நிதிஷ்குமாருடன் ஆலோசனை நடத்திய பின்னர் தான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கூடுவாஞ்சேரி அருகே ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கு ரூ.5.25 கோடியில் மாணவிகள் விடுதிக்கு கூடுதல் கட்டிடம்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு

மாமல்லபுரம் அருகே உப்பு உற்பத்திக்கு மாற்றாக ரூ.4,500 கோடி மதிப்பில் 3010 ஏக்கர் பரப்பளவில் சோலார் மின் நிலையம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய பெண் மேலாளர் கைது: உரிமையாளருக்கு வலை