Monday, September 9, 2024
Home » துணை மின்வாரிய அலுவலக கிடங்கு பகுதியில் மின்சார ஒப்பந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

துணை மின்வாரிய அலுவலக கிடங்கு பகுதியில் மின்சார ஒப்பந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

by Karthik Yash

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள துணை மின்வாரிய அலுவலக கிடங்கு பகுதியில் மின்சார ஒப்பந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து ெகாண்டார். கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் மங்காவரம் பகுதியைச் சேர்ந்த ரவி(52) என்பவர் வேலை செய்து வருகிறார். இவருக்கு சுமதி(48) என்ற மனைவியும், அம்மு, மதிமலர், சுஜிதா என்ற மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை ரவி தனது உறவினர் அன்பு என்பவருக்கு போன் செய்து தனது 3வது மகள் சுஜிதாவை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னைக்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, ரவியுடன் வேலை பார்த்த சக ஊழியர்கள் செல்போனில் அவரை தொடர்பு கொண்டனர். அப்போது, வெகு நேரம் அழைப்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி வந்தனர். இந்நிலையில், அன்று இரவு சந்தேகத்தின் பேரில் துணை மின்வாரிய அலுவலக கிடங்கு பகுதிக்கு சென்று உறவினர்கள் பார்வையிட்டனர். அங்கு ரவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தசம்பம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரவியின் சட்டை பையை சோதனை செய்தனர். அதில் இருந்த கடிதத்தில், குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒப்பந்த ஊழியரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

5 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi