Saturday, October 5, 2024
Home » 5 துணை கமிஷனர்கள், 2 எஸ்.பிக்கள் உள்ளிட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

5 துணை கமிஷனர்கள், 2 எஸ்.பிக்கள் உள்ளிட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

by Suresh

சென்னை: தமிழகத்தில் 5 துணை கமிஷனர்கள், 2 எஸ்.பிக்கள் உள்ளிட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பி கலைச்செல்வன் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாகவும், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி மகேஸ்வரன் காவல் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராகவும், காவல் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ஆரோக்கியம் மத்திய குற்றப்பிரிவு 3வது கிளை துணை கமிஷனராகவும்,

மத்திய குற்றப்பிரிவு 3வது கிளை துணை கமிஷனர் ஸ்டாலின் மத்திய குற்றப்பிரிவு முதல் கிளை துணை கமிஷனராகவும், மத்திய குற்றப்பிரிவு முதல் கிளை துணை கமிஷனர் நாகஜோதி மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பியாகவும், சேலம் மாநகர தெற்கு சரக துணை ஆணையர் ராஜேந்திரன் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராகவும், கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் மதிவானன் சேலம் மாநகர தெற்கு சரக துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi