தனது தந்தையோடு கரம் கோர்த்து, தமிழ்நாட்டை வளமான பாதையில் வழிநடத்துவதற்கு வருங்கால வைப்புநிதியாக நிற்கிறார் உதயநிதி ஸ்டாலின். அவர் கோடிக்கணக்கான தொண்டர்களின் இதயநிதியாய் வலம் வந்து, இன்று துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களின் சார்பில், இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தாத்தா கலைஞர் வழியில், தந்தை தளபதி ஸ்டாலின் வழியில், பேரன் உதயநிதியும் இஸ்லாமிய மக்களின் அரணாக நிற்பார் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு நிறையவே உள்ளது. தொடரட்டும் உங்கள் துணை முதலமைச்சர் பணி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.