சென்னை: சென்னை உளவுத்துறை துணை கமிஷனர் அரவிந்த் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை இணை கமிஷனராக தர்மராஜ் நியமிக்கப்பட்டுள்ளர். இது குறித்து உள்துறைச் செயலாளர் அமுதா வௌியிட்டுள்ள உத்தரவில், ‘‘சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக இருந்த தர்மராஜ், சென்னை மாநகர உளவுத்துறை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கமிஷனர் பதவி, இணை கமிஷனர் பதவியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சென்னை மாநகர உளவுத்துறை துணை கமிஷனராக இருந்த அரவிந்த் திருச்சி, தலைமையிட துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது.