துணை கமிஷனர் அரவிந்த் மாற்றம் சென்னை உளவுத்துறை இணை கமிஷனராக தர்மராஜ் நியமனம்

சென்னை: சென்னை உளவுத்துறை துணை கமிஷனர் அரவிந்த் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை இணை கமிஷனராக தர்மராஜ் நியமிக்கப்பட்டுள்ளர். இது குறித்து உள்துறைச் செயலாளர் அமுதா வௌியிட்டுள்ள உத்தரவில், ‘‘சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக இருந்த தர்மராஜ், சென்னை மாநகர உளவுத்துறை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கமிஷனர் பதவி, இணை கமிஷனர் பதவியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சென்னை மாநகர உளவுத்துறை துணை கமிஷனராக இருந்த அரவிந்த் திருச்சி, தலைமையிட துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்