துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

சென்னை: துணை முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்ட பிரதீப் யாதவ், உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக அமைச்சரவை கடந்த வாரம் மாற்றப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன.

இதையடுத்து, அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 8ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்., நேற்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related posts

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் அதிரடி

செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து..? சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை