சென்னை:ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.30.72 கோடி மதிப்பில் புதிய அரசு கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி, நாமக்கல், குமரி, திருச்சியில் ஒன்றிய அலுவலக கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.