பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் துரை தலைவர்கள் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் கடந்த 9.2.2024ல் நடைபெற்ற கூட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியிடங்களாகவுள்ள 5146 ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றியமைத்திடவும், ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியிடங்களாக உள்ள 3549 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்தும், ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்திடவும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.