வாரணாசி: ஞானவாபி மசூதி வழக்கில் அறிவியல் ஆய்வறிக்கையை சமர்பிக்க மேலும் 3 வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தொல்லியல் துறை அவகாசம் கோரியது. இதனை விசாரித மாவட்ட நீதிபதி ஏ.கே. விஸ்வேஷ், உரிய நேரத்தில் நிர்ணயித்த பணியை முடிக்கவும் இதற்கு மேலும் கூடுதல் அவகாசம் கேட்க கூடாது என்றும் அறிவுறுத்தி, மேலும் 10 நாட்கள் மட்டும் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.