இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ்மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலித் இளைஞர் அதுல் குமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட்,’மனுதாரரைப் போன்ற திறமையான மாணவரை ஏமாற்றி விடக்கூடாது. அரசியல் சட்டத்தின் 142வது பிரிவைப் பயன்படுத்தி ஐஐடி தன்பாத்தில் பிடெக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க வேண்டும். விடுதி சேர்க்கை போன்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்’ என்ற தலைமை நீதிபதி, இருகரம் கூப்பியபடி நின்ற மாணவர் அதுல்குமாரைப்பார்த்து,’ ஆல் தி பெஸ்ட். நன்றாக படிக்க வேண்டும்’ என்று வாழ்த்தினார்.