சென்னை : தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். வீடுகள், திறந்தவெளி பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பருவமழை நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.