சென்னை: டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வீடுகளில் தேங்கும் தண்ணீரை அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். கொசு உற்பத்தியை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.