சென்னை: மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நாளை முதல் விருப்ப மனு பெறப்படுகிறது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். செவ்வாய், புதன்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெறலாம். பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு கட்டணமாக ரூ.15,000 செலுத்த வேண்டும். தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு கட்டணமாக ரூ.10,000 செலுத்த வேண்டும். விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 21-ம் தேதி நேர்காணல் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.