Saturday, June 29, 2024
Home » மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

by Neethimaan

தஞ்சை: மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்று வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 19ம் தேதி பரவியது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இதை கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மணிப்பூர் கொடூர சம்பவத்தை கண்டித்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் கலவர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். மணிப்பூரில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டுமென கோஷங்கள் எழுப்பப்பட்டது.

You may also like

Leave a Comment

twenty + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi