டெல்லி: டெல்லியில் பஜன்புரா மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில், மசூதி உள்ளிட்டவை அகற்றப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றி வருகின்றனர். எந்தவித பிரச்னையுமின்றி அமைதியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறுகிறது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.