திருவனந்தபுரம்: மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலையை உருவாக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் நடந்த கொடூரம் ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் சிதைத்து விட்டன. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரம் மற்றும் வகுப்புவாதத்தை தூண்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.