டெல்லி: பாஜகவின் தேர்தல் சூழ்ச்சிகளில் இருந்து ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பாஜகவின் சர்வாதிகாரப் பிடியில் இருந்து ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் காப்பாற்றி உள்ளது. சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வரவேற்பு தெரிவித்தார்.