விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் நாளை மறுநாள் மீண்டும் மத்திய அரசு உடன் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மத்திய பாஜக அரசை கண்டித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய சங்கம் நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடத்த போவதாக அழைப்பு விடுத்திருந்தனர். இந்த பாரத் பந்த் போராட்டத்துக்கு பல்வேறு விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. இந்த போராட்டத்தின் 3-வது நாளான நேற்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா மாவட்டத்தின் ராஜ்புராவில் உள்ள ரயில் நிலையத்தில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.