மெதூர் 3வது பகுதியில் பணி புரியும் கிராம நிர்வாக அலுவலர் இளையமணி என்பவர் கடந்த ஒரு மாதமாக சரிவர பணிக்கு வரவில்லை, அப்படி வந்தாலும் சான்றிதழ்கள் தருவதில்லை சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றுகள் இல்லாததால் விவசாயிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஜமாபந்தி அதிகாரியும் சப் கலெக்டருமான சாஹே சன்கேத் பல்வந்திடம் புகார் மனு கொடுத்தனர். இதனை பெற்றுக் கொண்டவர் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.