இந்த வழக்கில் ஓய்வு பெற்ற ஜெகதீஷ் குமார் அரோரா, ஒப்பந்ததாரர் அனில் குமார் அகர்வால் ஆகியோரை பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை கடந்த 31ம் தேதி கைது செய்தது. இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார், டெல்லி குடிநீர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஷலப் குமார், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினரும், பொருளாளருமான என்.டி.குப்தா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர். இதேபோல் ஆம் ஆத்மி பிரமுகர் சிலரது இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா? என்பது குறித்து அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.