டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ED தாக்கல் செய்த வழக்கில் ஜாமினுக்கு தடை விதித்தது டெல்லி ஐகோர்ட். கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.