சென்னை: டெல்லியை ஒரு மாநகராட்சியை போல தரம் குறைக்கும் டெல்லி மசோதா நிறைவேறிய நாள் மக்களாட்சியின் கறுப்புநாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பா.ஜ.க.வின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது. 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்கு குறைத்து பா.ஜ.க. சதிச்செயல் என்று கூறியுள்ளார்.