அதில், பிடிபட்ட நபர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த பாலச்சந்திரன் (45), ராம்குமார் (25), என்பதும், டெல்லியில் இருந்து கேட்டமைன் என்ற போதைப் பொருளை ரயில் மூலம் கடத்தி வந்து நாகப்பட்டினத்தில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 30 கிலோ கேட்டமைன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி என போலீசார் தெரிவித்தனர். இவர்கள் ரயில் மூலம் கேட்டமைன் போதை பொருளை கடத்தி வந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்றால் போலீசார் சோதனையில் சிக்கி கொள்வோம் என்பதற்காக போலீசாரிடம் சிக்காமல் இருக்க அம்பத்தூரை அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து அரசு பேருந்து மூலம் பூந்தமல்லி கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.