டெல்லி: டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்த விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சோதனைக்குப் பின் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததை அடுத்து விமான சேவை வழக்கம்போல் இயக்கப்படுகிறது.