டெல்லி: டெல்லியில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஒன்றிய அரசுடனான விவசாயிகள் பேச்சுவார்த்தை சண்டிகரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்த் ராய்! ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.