ஜனாதிபதி மாளிகையின் சுற்றுப்புறத்தை இந்திய கலாச்சார விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்க ஒரு நிலையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனாதிபதி மாளிகையின் முக்கியமான இரண்டு அரங்குகளான ‘தர்பார் ஹால்’ மற்றும் ‘அசோக் ஹால்’ ஆகியவற்றை முறையே ‘கணதந்திர மண்டபம்’ மற்றும் ‘அசோக் மண்டபம்’ என மறுபெயரிடுவதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மகிழ்ச்சியடைகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் போன்ற முக்கியமான விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடமாக ‘தர்பார் ஹால்’ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.