இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பான இருதரப்பு வாதத்தின்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், “தலைமை செயலாளர் நியமனம் குறித்து டெல்லி முதல்வரும், ஆளுநரும் ஏன் இதுவரை சந்தித்து பேசவில்லை?“ என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் டி.ஒய்.சந்திர சூட் பிறப்பித்த உத்தரவில், “தலைமை செயலாளர் நியமன விவகாரத்தில் டெல்லி முதல்வரும், ஆளுநரும் அமர்ந்து பேசி சுமூக தீர்வை எடுக்க வேண்டும். டெல்லியின் புதிய செயலாளரை நியமிக்க தகுதியுடைய 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களை வரும் 28ம் தேதி காலை 10.30 மணிக்குள் ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பட்டியல் குறித்த தனது முடிவை டெல்லி அரசு அன்றைய தினமே தெரிவிக்க வேண்டும். டெல்லி அரசின் பரிந்துரையின்படி ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள ஒருவர் டெல்லி புதிய தலைமை செயலாளராக அறிவிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.