புதுடெல்லி: முப்பது வயதான பஞ்சாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயங்கள் அடைந்து விட்டேன். நூறு சதவிகித உடல் செயல்பாடுகள் இல்லை. எனவே தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து மேற்கண்ட மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘‘சம்பந்தப்பட்ட நபர் எந்தவிதமான கூடுதல் மருத்துவ உதவிகளும் இல்லாமல் தொடர்ந்து உயிருடன் இருந்து வருகிறார். இருப்பினும் எந்த வகையிலும் மரணத்தை ஏற்படுத்தும் விதமாக கருணை கொலைக்கு அனுமதிக்க முடியாதுஎனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.