கோடை காலத்தில் நாடு முழுவதும் 40த்திற்கும் மேற்பட்டோர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனிடையே டெல்லியில் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை முன்னுரிமை அடிப்படையில், அனுமதிக்குமாறு மருத்துவமனைகளை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையின்றி மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் போதுமான அளவில் தண்ணீர் அருந்துமாறும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே தலைநகர் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களை சேர்ந்த மக்கள் கடத்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான நீண்ட கோடை காலத்தை அனுபவித்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நீண்ட கோடை காலத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.