நீதிபதிகள் : கெஜ்ரிவால் டெல்லி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; தற்போது அங்கு தேர்தல் நடக்கிறது. அவர் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. தற்போது அங்கு அசாதாரணமான சூழ்நிலை; கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல.
அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா : கெஜ்ரிவால் முதலமைச்சர் என்பதால் வழக்கில் இருந்து விலகி செல்லக்கக்கூடாது. தேர்தல் பிரசாரம் செய்வது அவ்வளவு அவசியமா?
நீதிபதிகள் : 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது; அரசு தலைமை வழக்கறிஞர் கூறுவதை ஏற்க முடியாது. குற்ற செயல்களில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை தனி விதமாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறவில்லை.
அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா : கெஜ்ரிவாலுக்கு ஜாமின் தரவேண்டுமா வேண்டாமா என்பதுதான் கேள்வி!!
நீதிபதிகள் : 1 மணிக்குள் வாதங்களை முடிப்பீர்களா?
அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா : இன்றைய தினமே இ.டி. தரப்பு வாதங்களை முடித்துவிடுவோம் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது. கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அவரை கைது செய்திருக்க மாட்டோம். அனைத்து தரப்பினரும் சமம் தான். கெஜ்ரிவால் வாதங்களை முன்வைக்க 3 நாட்கள் அனுமதி தந்ததால், இ.டி. தரப்பு வாதங்களையும் முன்வைக்க அனுமதி தரவேண்டும்.
நீதிபதிகள் : தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக வாதிடுவதற்கு கெஜ்ரிவால் தரப்புக்கு உரிமை உள்ளது. 2 நாட்கள் தான் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.
கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி : தவறான கருத்தை உருவாக்க துஷார் மேத்தா முயற்சி செய்கிறார். நிபந்தனைகளின் அடிப்படையில் இடைக்கால ஜாமின் வழங்கப்படுவது வழக்கம்தான். முதல்வரின் கையெழுத்து இல்லை என்று கூறி, துணை நிலை ஆளுநர் அரசு கோப்பை திருப்பி அனுப்பி விட்டார்.
வாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.