இந்த சூழலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி மதுபான முறைகேடு புகார் தொடர்பாக எனக்கு அமலாக்கப்பிரிவு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவை பயன்படுத்தி என்னை கைது செய்ய பாஜக அரசு விரும்புகிறது. அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்ட விரோதமானவை. பொய்யானவை. அமலாக்கப்பிரிவு அனுப்பும் சம்மன் சட்டப்பூர்வமானதாக இருந்தால் ஒத்துழைக்கத் தயார். பாஜகவின் செயல்பாடுகள் ஜனநாயக விரோதம். பாஜகவினர் ஊழலில் ஈடுபட்டால் ஒன்றிய விசாரணை அமைப்புகள் கண்டுகொள்வதில்லை. வரும் தேர்தலில் நான் பிரசாரம் மேற்கொள்வதை தடுக்க பாஜக முயற்சிக்கிறது. மக்களவைத் தேர்தல் வரவுள்ள நேரம் பார்த்து அமலாக்கத்துறை எனக்கு சம்மன் அனுப்புவது ஏன்?. நான் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை. நேர்மையான அரசியல்வாதிகளை ஒன்றிய பாஜக அரசு சிறையில் தள்ளுவது கண்டனத்திற்குரியது. பாஜகவில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.