டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீடு முற்றுகையிடப்பட்டது. ரூபாய் நோட்டுகளை வாகனத்தின் மீது கொட்டி மாணவர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும், அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.