டெல்லி: டெல்லி சரிதா விஹார் காவல் நிலையம் அருகே ஷான்-இ- பஞ்சாப் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 பெட்டிகளில் பரவிய தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர் சேதம், காயம் குறித்த தகவல்கள் ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தீ அணைக்கப்பட்ட பிறகே தீ விபத்திற்கான காரணங்கள் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். டெல்லியில் அதிக வெயிலின் காரணமாக அதிக தீ விபத்துகள் ஏற்படுகின்றன. சமீபத்தில் ஒரே நாளில் சுமார் 200 அலைப்புகள் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.