இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணை சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன் வந்தது. அதை விசாரித்த அவர், அரசு தரப்பு குற்றத்தை நிரூபிக்க தவறியதால், சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவரான சஜ்ஜன் குமாருக்கு அளித்து அவரை வழக்கிலிருந்து விடுவித்ததுடன், அவரோடு குற்றம் சாட்டப்பட்ட வேத பிரகாஷ் பியல், பிரம்மானந்த குப்தா ஆகிய இருவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.