இதனால் தபால் நிலைய ரவுண்டானா அருகில் பஸ் நிலையம் செல்லும் சாலையில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் தனது கையில் மனித மண்டை ஓடுகளை வைத்தவாறு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.
மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள செல்போன் டவரில் 50 அடி உயரத்துக்கு சங்க கொடியுடன் 5 விவசாயிகள் திடீரென ஏறி கோஷமிட்டனர். இதை பார்த்த போலீசார், உடனடியாக 5 பேரையும் செல்போன் டவரில் இருந்து இறங்குமாறு ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொண்டனர். 15 நிமிட போராட்டத்துக்கு பிறகு 5 விவசாயிகளும் டவரில் இருந்து இறங்கி வந்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 60 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.