டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் ஜே.என்.யூ. மாணவர் அமைப்பினர் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் முறைகேடுகளுக்கு காரணமான தேசிய தேர்வு முகமையை கலைக்கக் கோரியும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.