டெல்லி: வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் பெரும்பாலான இடங்களில் 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. வெயிலின் உச்சத்தை தாக்கு பிடிக்க முடியாமல் வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அவதி அடைந்து வருகின்றனர். வெயிலில் வேலை செய்யும் கட்டுமான தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு தினசரி 12-3 மணி வரை கட்டாயம் ஓய்வு வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. வெப்பநிலை குறையும் வரை குறிப்பிட்ட உத்தரவுகள் அமல்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.