டெல்லி: டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள் மீது மீண்டும் சரமாரி கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டுள்ளது. டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்கினர். விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததால் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லி சம்பு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டு வருகிறது.