சென்னை: மேற்கு வங்கம் அருகே வடக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது. அதன் காரணமாக வறண்ட வானிலை நிலவுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மதுரையில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. நாகப்பட்டினம் 102 டிகிரி, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, புது்ச்சேரி, திருச்சி, கரூர், சென்னை ஆகிய பகுதிகளில் 100 டிகிரி வெயில் நிலவியது.
இதற்கிடையே தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 21ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இருப்பினும், தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வ ரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.