சென்னை: அதிமுகவின் அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம்போல் இயக்க வேண்டும். தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி. அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக திமுக அரசு தீர்த்து வருகிறது. மற்ற பிரச்சனைகளையும் அரசு தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்று வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பேரவைப் பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.