சென்னை: நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளை பரப்பி, மக்களாட்சிக்கு இடையூறு செய்யும் ஆளுநர் அமைதி காக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் நெறியில் வந்த தமிழ்நாட்டுக்கும், பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்துக்கும் தொடர்பில்லை. வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களை சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத்தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளை தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார்.