நெல்லை: பழைய குற்றாலத்தை சூழல் சுற்றுலா மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை வனத்துறை முடுக்கிவிட்டுள்ளது. கிராம அளவில் வளர்ச்சிக்குழு அமைத்து அருவி பகுதியை மேம்படுத்தவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. எதிர்ப்பு தெரிவித்து வரும் வியாபாரிகள், மக்களை நேரில் அழைத்து விளக்கம் அளிக்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது.