இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அன்சர் கடன் பெற்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வந்து கடன் தொகையை செலுத்தும்படி மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மும்தாஜ், மகன் இம்ரான் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தனர். நேற்று மதியம் 12 மணி ஆகியும் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இம்ரான்,அவரது தாய் மும்தாஜ் ஆகிய இருவரும் மின்விசிறிகளில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தனர். தகவலறிந்து பேரணாம்பட்டு போலீசார் வந்து விசாரித்தனர். இம்ரானின் செல்போனை ஆய்வு செய்ததில் தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமான வீடியோவை பதிவு செய்து வைத்திருந்தார்.
அதில், ‘நான் யாரிடமும் கடன் வாங்கவில்லை. என்னிடம் கடன் ெதாகையை கேட்டு தொந்தரவு செய்வது எந்த விதத்தில் நியாயம்? கடன் கொடுத்தவர்கள் என் அப்பாவிடம் கேளுங்கள். ஆனால் என்னை தொந்தரவு செய்வதால் வாழ முடியவில்லை’ என தெரிவித்துள்ளார். மேலும் மும்தாஜ் எழுதிய கடிதத்தில், ‘கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்யும் நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேர் கும்பலாக வந்து எங்களை மிரட்டினர். இதனால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறோம்’ என எழுதி வைத்துள்ளார். இதன்படி அவர்களை மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.