கொடுத்த ரூ.11 லட்சம் கடன் வரலையே… கடிதம் எழுதிவிட்டு தம்பதி தற்கொலை

வேலூர்: வேலூர் சலவன்பேட்டை சேஷாசலம் முதலி தெருவை சேர்ந்தவர் முருகேசன்(62). இவரது மனைவி வைஜெயந்தி மாலா(60). இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது அவர்கள் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில், ‘எங்கள் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் எங்களிடம் ரூ.11 லட்சம் கடனை பெற்றார். அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது மகன்களிடம் கேட்டோம். அவர்கள் எங்களுக்கு தெரியாது என கூறிவிட்டனர். கஷ்டப்பட்டு சேமித்த பணம் இல்லாததால் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறோம்’ என எழுதியிருந்தனர்.

Related posts

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும்; தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு அன்புமணி வரவேற்பு!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை!

தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு!