இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜமீன்கோட்டாம்பட்டி ராமர்கோயில் வீதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் சக்திகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு சக்திகுமார், ‘‘எனது சாவுக்கு என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த கணேசமூர்த்தி, சாதிக்பாஷா, செந்தில்நாதன் ஆகிய 3 பேர் காரணம்’’ என தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.