மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு!

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 9 ஆக உயர்ந்துள்ளது. மதுரை சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மதுரை போடி ரயில் தடத்தில் ஐ ஆர்சிடிசி சுற்றுலா ரயில் நேற்றிரவு நிறுத்தப்பட்டிருந்தது. இதில் சிலர் சமையல் கேஸ் வைத்து டீ போட முயன்றதாக தெரிகிறது. இந்த சூழலில் காலை 5.30 மணி அளவில் இந்த சுற்றுலா ரயிலின் சமையல் கோசில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த 90 பேரில் 80 பேர் தப்பி ஓடியதாக தெரியவந்துள்ளது. ரயில் இருந்த பயணிகள் சிலர் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைத்திருந்தனர்.

இதன் மூலமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. ரயில் விபத்து நடந்த இடத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி