புதுக்கோட்டை: விஜயகாந்த் மறைவையொட்டி புதுக்கோட்டை கறம்பக்குடியில் வியாபாரிகள் அமைதிப் பேரணி நடத்தினர். புதுக்கோட்டை வம்பனில் கடைகளை அடைத்து வியாபாரிகள், தேமுதிகவினர் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து நாகை மீனவப் பெண்கள் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கள்ளக்குறிச்சி திருக்கோவிலூரில் அனைத்து கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.